Monday, January 4, 2010

தாய்க்கோழி...

கூட்டமாய் தானியங்களைக் கொத்தி தின்று
பெரும் ஆரவாரத்தோடு ஊர்வலம் செல்கின்றன
குஞ்சுகள் தாய்க்கோழியோடு...
அரைவட்டமாய் வளைந்த வானத்தில்
வட்டமிடுகின்றன பருந்துகள்
மரணத்தின் நிழல்விழுவதை அறிந்து
பயந்து பதறி தாயின் நிழலில்
கூடுகின்றன குஞ்சுகள்
இறக்கையை விரித்து வல்லூரின்
வலிமையை திரட்டி விரட்டி
அடிக்கிறது பருந்தை,
தாய்க்கோழியின் இறப்பிற்குப்பின்
மீண்டும் வட்டமிடுகின்றன பருந்துகள்
எல்லாக் குஞ்சுகளும் தாய்க்கோழிகளாய்...

No comments:

Post a Comment