Thursday, December 24, 2009

உடைபடாத மௌனம்

உடைபடாத மெளனம்
வார்த்தைகளற்ற நிசப்தமல்ல
எல்லாம் எல்லாம்
உறைந்து போன சூன்யவெளி அல்ல
அடி ஆழத்திலிருந்து மேலே வந்து
எக்கணமும் உடைந்து விடும்
நீர்க்குமிழ்கள் போல
வாழ்வின் தாங்கமுடியாத பாரமும்
காதலின் ஆற்றாமையும்
ஸ்படிகத்தைப்போன்ற
பிரியஙளின் கண்ணீரும்
இருக்கலாம்
மெளனம் வார்த்தைகளற்ற நிசப்தமல்ல