உடைபடாத மெளனம்
வார்த்தைகளற்ற நிசப்தமல்ல
எல்லாம் எல்லாம்
உறைந்து போன சூன்யவெளி அல்ல
அடி ஆழத்திலிருந்து மேலே வந்து
எக்கணமும் உடைந்து விடும்
நீர்க்குமிழ்கள் போல
வாழ்வின் தாங்கமுடியாத பாரமும்
காதலின் ஆற்றாமையும்
ஸ்படிகத்தைப்போன்ற
பிரியஙளின் கண்ணீரும்
இருக்கலாம்
மெளனம் வார்த்தைகளற்ற நிசப்தமல்ல